Saturday, November 11, 2006

உன் நினைவுகள்

உறங்கப்போன போது
கதவுடைந்த சத்தம் கேட்டு,
ஓடி வந்து பார்த்தேன்.
இரைந்து கிடந்தன
விரைந்து வந்த
உன் நினைவுகள்.

- 27-09-2006, 12:56AM

எது கடவுள்?.

இரைந்திருந்த காசுகளை,
வாரிக் கொண்டான்.
வரைந்திருந்த படத்தை,
மிதித்து சென்றான்.
அவன் அறிவான்,
எது கடவுள்?.

ஏன் கடவுள்?

தட்டிலிருந்த காசுகளை,
கொட்டிக் கொண்டான்.
கொட்டியிருந்த சாம்பலை,
தட்டிச் சென்றான்.
அவன் அறிவான்,
ஏன் கடவுள்?

காதல்

விழுந்தவனின் உலகம்,
விழாதவனின் ஏக்கம்,
விழுந்தெழுந்தவனின் பள்ளம்,
அந்த கிணறு.

தனிமை.

நீ இங்கு இல்லாததை,
கேலி பேசி சிரிக்கிறது,
கூட்டமாய் வந்திருக்கும்,
தனிமை.

நடந்தது என்னவென்றால்

நேற்று,
இயேசு சிலுவையில்
அறைவதைப் பார்த்து,
சிரித்து விட்டேன்.

இன்று,
அவன்,
அவளை அனுப்பியிருக்கிறான்.