பறிக்காமலே இருந்திருக்கலாமென
யோசித்துக் கொண்டிருக்கையில்...
இதழிதழாய் உதிர்த்துக்கொண்டது
பூ.
Thursday, December 24, 2009
விழிகள்
வாசல் வழி
செல்பவர் யாரும்
என் விழிகளைக் கண்டால்
சென்று உறங்கச்சொல்லுங்கள்..
இனி யாரும்
வரப்போவதில்லை என்று.
செல்பவர் யாரும்
என் விழிகளைக் கண்டால்
சென்று உறங்கச்சொல்லுங்கள்..
இனி யாரும்
வரப்போவதில்லை என்று.
நம்பிக்கை
இன்னும்
பத்திரமாயிருக்கிறது
நீ விட்டு சென்ற
நம்பிக்கையும்
காலணியும்.
தொலைந்து போனது
தொடர்புபடுத்திக்கொள்ளும்
அறிவுதான்.
பத்திரமாயிருக்கிறது
நீ விட்டு சென்ற
நம்பிக்கையும்
காலணியும்.
தொலைந்து போனது
தொடர்புபடுத்திக்கொள்ளும்
அறிவுதான்.
ஈழம் “வியாபாரத்தின் வழி”
பலர்
காரியம் செய்தார்கள்.
சிலர் அதை
கவிதை செய்கிறார்கள்.
நாம் அதை
காசு செய்வோம்.
காரியம் செய்தார்கள்.
சிலர் அதை
கவிதை செய்கிறார்கள்.
நாம் அதை
காசு செய்வோம்.
வளையோசை
விரலோடு விரல் சுற்றி
உன் வளை ஒலியெழுப்பும்
சாவி கொத்தின்
சப்தத்தில்
மறந்து போனது
யோசித்து வைத்திருந்த
கவிதை.
உன் வளை ஒலியெழுப்பும்
சாவி கொத்தின்
சப்தத்தில்
மறந்து போனது
யோசித்து வைத்திருந்த
கவிதை.
மேகங்கள்
கடைசி சுவாசத்தின்
வெப்பத்தில்
ஆவியாகி
மேலெழுந்து
எங்கோ தேடித்திரிந்து
நீ வாழும்
நிலப்பரப்பில்
நிழல்பரப்பும்
மேகங்களாய்
நான் சிந்திய
கண்ணீர் துளிகள்.
வெப்பத்தில்
ஆவியாகி
மேலெழுந்து
எங்கோ தேடித்திரிந்து
நீ வாழும்
நிலப்பரப்பில்
நிழல்பரப்பும்
மேகங்களாய்
நான் சிந்திய
கண்ணீர் துளிகள்.
கவிதை
உனக்கு
கவிதை
வேண்டுமா?
எதையோ எழுதி
உன்னவளை
வாசிக்க சொல்.
அவளுக்கு
கவிதை
வேண்டுமா?
இதையே எழுதி
உள்ளுக்குள்
வாசிக்க சொல்.
கவிதை
வேண்டுமா?
எதையோ எழுதி
உன்னவளை
வாசிக்க சொல்.
அவளுக்கு
கவிதை
வேண்டுமா?
இதையே எழுதி
உள்ளுக்குள்
வாசிக்க சொல்.
நிலை
அதிகாலை எழுந்து
விடியலைப் பார்த்து
நேரங்களை துரத்தி
வெற்றிடம் தவிர்த்து
வேலையில் மூழ்கி
மாலைக்கு காத்திருந்து
மெளனமாய் பேசி
சத்தமாய் சிரித்து
நிம்மதியாய் தூங்கி
வெகு நாட்களாகியிருக்கிறது.
விடியலைப் பார்த்து
நேரங்களை துரத்தி
வெற்றிடம் தவிர்த்து
வேலையில் மூழ்கி
மாலைக்கு காத்திருந்து
மெளனமாய் பேசி
சத்தமாய் சிரித்து
நிம்மதியாய் தூங்கி
வெகு நாட்களாகியிருக்கிறது.
கவிதை
குழந்தையின்
கதறலை
பொருட்படுத்தாமல்
கையிலிருந்த
பொம்மையை
பிடுங்கி செல்கிறாய் நீ.
பாவம்..
கவிதை எழுத தெரியாத
குழந்தை என்ன
செய்யும்?
கதறலை
பொருட்படுத்தாமல்
கையிலிருந்த
பொம்மையை
பிடுங்கி செல்கிறாய் நீ.
பாவம்..
கவிதை எழுத தெரியாத
குழந்தை என்ன
செய்யும்?
மறதி
இருகண்களையும்
இமை சுருங்க
இறுக்க மூடி..
தலைகுனிந்து
நெற்றி வருடி..
அலறும் பாடல்,
அசையும் திரைச்சீலை,
அடிக்கும் நாள்காட்டி,
அனைத்தையும்
நிசப்பதமாக்கி..
தேவையே இல்லாமல்
ஓடி வந்து குறுக்கிடும்
எண்ணங்களை
புறந்தள்ளி..
நினைவு புள்ளியை
பின்நோக்கி இழுத்தும்
இன்னும்
நியாபகம் வரவில்லை
முதல் காதலியின்
முகம்.
இமை சுருங்க
இறுக்க மூடி..
தலைகுனிந்து
நெற்றி வருடி..
அலறும் பாடல்,
அசையும் திரைச்சீலை,
அடிக்கும் நாள்காட்டி,
அனைத்தையும்
நிசப்பதமாக்கி..
தேவையே இல்லாமல்
ஓடி வந்து குறுக்கிடும்
எண்ணங்களை
புறந்தள்ளி..
நினைவு புள்ளியை
பின்நோக்கி இழுத்தும்
இன்னும்
நியாபகம் வரவில்லை
முதல் காதலியின்
முகம்.
இடைவெளி
உன்
வார்த்தைக்கு
இடையிலான வெளி
மாதங்களாகி
போயிருக்கிறது..
என்
மெளனங்களுக்கு
இடையிலான மொழி
இல்லாமல்
போயிருக்கிறது.
வார்த்தைக்கு
இடையிலான வெளி
மாதங்களாகி
போயிருக்கிறது..
என்
மெளனங்களுக்கு
இடையிலான மொழி
இல்லாமல்
போயிருக்கிறது.
தனிமை
ஏதும் இல்லாத என்னை
ஏதோ ஒன்று
எப்பொழுதும்
பின் தொடர்கிறது.
ஓடி சென்று
ஒளிந்து கொண்டு
பார்க்கும் என்
முதுகு தட்டி நகைக்கிறது
நீ
விட்டு சென்ற
தனிமை.
ஏதோ ஒன்று
எப்பொழுதும்
பின் தொடர்கிறது.
ஓடி சென்று
ஒளிந்து கொண்டு
பார்க்கும் என்
முதுகு தட்டி நகைக்கிறது
நீ
விட்டு சென்ற
தனிமை.
காற்று
ஆவேசமாய் பொங்கி,
பெருங்கூச்சலுடன் ஓடி வந்து,
அருகே வர அமைதியாகி,
வெள்ளையாய் சிரித்து,
அடி மண் திருடும்
அலைக்கு அஞ்சி,
இறுக்கிபிடிக்கும்
உன் விரல்களை
தேடுகிறது
என் விரலிடுக்கில்
காற்று.
பெருங்கூச்சலுடன் ஓடி வந்து,
அருகே வர அமைதியாகி,
வெள்ளையாய் சிரித்து,
அடி மண் திருடும்
அலைக்கு அஞ்சி,
இறுக்கிபிடிக்கும்
உன் விரல்களை
தேடுகிறது
என் விரலிடுக்கில்
காற்று.
கடவுள்
உதிர்ந்துபோன
பூக்களை
தலை கவிழ்ந்து
வெறித்துப்பார்க்கிறது
மரம்.
கையில்
புயல் வீசும்
சாமரத்துடன்
கடவுள்.
பூக்களை
தலை கவிழ்ந்து
வெறித்துப்பார்க்கிறது
மரம்.
கையில்
புயல் வீசும்
சாமரத்துடன்
கடவுள்.
விடியல்
நடந்தவை அனைத்தும்
கனவாயிருக்கக் கூடாதா
எனும் எண்ணத்தில்
எரிநெய் ஊற்றி
கொளுத்தியபடி
விழிக்கிறது
விடியலுக்கான
சூரியன்.
கனவாயிருக்கக் கூடாதா
எனும் எண்ணத்தில்
எரிநெய் ஊற்றி
கொளுத்தியபடி
விழிக்கிறது
விடியலுக்கான
சூரியன்.
நடந்து செல்லும் கம்பிகள்
இரும்புக் கதவின்
மறுபுறம் நான்.
கடந்து செல்கிறாய்
சாலையில் நீ.
நடந்து செல்கின்றன
பார்வையில் கம்பிகள்..
மறுபுறம் நான்.
கடந்து செல்கிறாய்
சாலையில் நீ.
நடந்து செல்கின்றன
பார்வையில் கம்பிகள்..
வாழ்க்கை
அறைக்குள் எல்லாம் என்றும் வடியாத இருள்.
மொழியில் எல்லாம் வெரும் புரியாத பொருள்.
புத்தகம் எல்லாம் இன்னும் எழுதாத கவிதை.
நாட்கள் எல்லாம் ஒன்றும் வாழாத வாழ்க்கை.
மொழியில் எல்லாம் வெரும் புரியாத பொருள்.
புத்தகம் எல்லாம் இன்னும் எழுதாத கவிதை.
நாட்கள் எல்லாம் ஒன்றும் வாழாத வாழ்க்கை.
மரணம்
கைகளுடன்
விளையாடிக் கொண்டு
தரை நோக்கி தாவும்
கண்ணாடியின் முகத்தில்
கடைசிவரை தெரிவதில்லை
மரணத்திற்கான பிம்பம்.
விளையாடிக் கொண்டு
தரை நோக்கி தாவும்
கண்ணாடியின் முகத்தில்
கடைசிவரை தெரிவதில்லை
மரணத்திற்கான பிம்பம்.
நஷ்டஈடு
தூங்கிப்போன அம்மாவால்
நின்றுபோன தொட்டில்
காற்றுடைத்த
பலூன்களுக்கான அழுகை
காய்ச்சல் தீபாவளியின்
சப்தமில்லாத ஏமாற்றம்
தங்கை பிடித்துக்கொண்ட
ஜன்னலோர இருக்கை
இரண்டே பேருந்து நிறுத்ததில்
இறங்கி போன முதல் காதல்
கல்லூரிக் கடைசியில்
எனைத் தொலைத்த நண்பர்கள்
யாரோ பெயரில் அச்சான
திருட்டுப்போன என் கவிதை
அத்தனைக்கும் நஷ்டஈடாய்
ஒரு வாரமாய் நீ.
நின்றுபோன தொட்டில்
காற்றுடைத்த
பலூன்களுக்கான அழுகை
காய்ச்சல் தீபாவளியின்
சப்தமில்லாத ஏமாற்றம்
தங்கை பிடித்துக்கொண்ட
ஜன்னலோர இருக்கை
இரண்டே பேருந்து நிறுத்ததில்
இறங்கி போன முதல் காதல்
கல்லூரிக் கடைசியில்
எனைத் தொலைத்த நண்பர்கள்
யாரோ பெயரில் அச்சான
திருட்டுப்போன என் கவிதை
அத்தனைக்கும் நஷ்டஈடாய்
ஒரு வாரமாய் நீ.
நத்தினி
சோக முட்கள் வெட்டி விட்டு
சோலை மரங்கள் நட்டவள் நீ
இறக்கை ரெண்டு கட்டிவிட்டு
வெட்டவெளியில் விட்டவள் நீ
ஆயுள் ரேகை அழிந்தபின்னும்
ஆணி வேரில் விழுந்த பனி
பாத ரேகை தேய்ந்த பின்னும்
பயணிக்க உடன் வந்தவள் நீ
காணாமல் போன குயில்
அலைப்பேசியில் பேசும் தொனி
தானாக நான் சிரிக்க
பைத்தியங்கள் தோற்கும் இனி
வாழ்க்கை வற்றிய நேரத்தில்
வானம் தந்த நதி நீ
வாழ வேண்டும் உன்னோடு
வர வேண்டும் நத்தினி
சோலை மரங்கள் நட்டவள் நீ
இறக்கை ரெண்டு கட்டிவிட்டு
வெட்டவெளியில் விட்டவள் நீ
ஆயுள் ரேகை அழிந்தபின்னும்
ஆணி வேரில் விழுந்த பனி
பாத ரேகை தேய்ந்த பின்னும்
பயணிக்க உடன் வந்தவள் நீ
காணாமல் போன குயில்
அலைப்பேசியில் பேசும் தொனி
தானாக நான் சிரிக்க
பைத்தியங்கள் தோற்கும் இனி
வாழ்க்கை வற்றிய நேரத்தில்
வானம் தந்த நதி நீ
வாழ வேண்டும் உன்னோடு
வர வேண்டும் நத்தினி
Subscribe to:
Comments (Atom)