இருகண்களையும்
இமை சுருங்க
இறுக்க மூடி..
தலைகுனிந்து
நெற்றி வருடி..
அலறும் பாடல்,
அசையும் திரைச்சீலை,
அடிக்கும் நாள்காட்டி,
அனைத்தையும்
நிசப்பதமாக்கி..
தேவையே இல்லாமல்
ஓடி வந்து குறுக்கிடும்
எண்ணங்களை
புறந்தள்ளி..
நினைவு புள்ளியை
பின்நோக்கி இழுத்தும்
இன்னும்
நியாபகம் வரவில்லை
முதல் காதலியின்
முகம்.
Thursday, December 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment