தூங்கிப்போன அம்மாவால்
நின்றுபோன தொட்டில்
காற்றுடைத்த
பலூன்களுக்கான அழுகை
காய்ச்சல் தீபாவளியின்
சப்தமில்லாத ஏமாற்றம்
தங்கை பிடித்துக்கொண்ட
ஜன்னலோர இருக்கை
இரண்டே பேருந்து நிறுத்ததில்
இறங்கி போன முதல் காதல்
கல்லூரிக் கடைசியில்
எனைத் தொலைத்த நண்பர்கள்
யாரோ பெயரில் அச்சான
திருட்டுப்போன என் கவிதை
அத்தனைக்கும் நஷ்டஈடாய்
ஒரு வாரமாய் நீ.
Thursday, December 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment