Thursday, December 24, 2009

நஷ்டஈடு

தூங்கிப்போன அம்மாவால்
நின்றுபோன தொட்டில்

காற்றுடைத்த
பலூன்களுக்கான அழுகை

காய்ச்சல் தீபாவளியின்
சப்தமில்லாத ஏமாற்றம்

தங்கை பிடித்துக்கொண்ட
ஜன்னலோர இருக்கை

இரண்டே பேருந்து நிறுத்ததில்
இறங்கி போன முதல் காதல்

கல்லூரிக் கடைசியில்
எனைத் தொலைத்த நண்பர்கள்

யாரோ பெயரில் அச்சான
திருட்டுப்போன என் கவிதை

அத்தனைக்கும் நஷ்டஈடாய்
ஒரு வாரமாய் நீ.

No comments: