Thursday, December 24, 2009

நத்தினி

சோக முட்கள் வெட்டி விட்டு
சோலை மரங்கள் நட்டவள் நீ

இறக்கை ரெண்டு கட்டிவிட்டு
வெட்டவெளியில் விட்டவள் நீ

ஆயுள் ரேகை அழிந்தபின்னும்
ஆணி வேரில் விழுந்த பனி

பாத ரேகை தேய்ந்த பின்னும்
பயணிக்க உடன் வந்தவள் நீ

காணாமல் போன குயில்
அலைப்பேசியில் பேசும் தொனி

தானாக நான் சிரிக்க
பைத்தியங்கள் தோற்கும் இனி

வாழ்க்கை வற்றிய நேரத்தில்
வானம் தந்த நதி நீ

வாழ வேண்டும் உன்னோடு
வர வேண்டும் நத்தினி

No comments: