சோக முட்கள் வெட்டி விட்டு
சோலை மரங்கள் நட்டவள் நீ
இறக்கை ரெண்டு கட்டிவிட்டு
வெட்டவெளியில் விட்டவள் நீ
ஆயுள் ரேகை அழிந்தபின்னும்
ஆணி வேரில் விழுந்த பனி
பாத ரேகை தேய்ந்த பின்னும்
பயணிக்க உடன் வந்தவள் நீ
காணாமல் போன குயில்
அலைப்பேசியில் பேசும் தொனி
தானாக நான் சிரிக்க
பைத்தியங்கள் தோற்கும் இனி
வாழ்க்கை வற்றிய நேரத்தில்
வானம் தந்த நதி நீ
வாழ வேண்டும் உன்னோடு
வர வேண்டும் நத்தினி
Thursday, December 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment